ரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை

['அன்புள்ள தம்பிக்கு' உமர் எழுதிய முந்தைய கடிதங்களை படிக்க இங்கு சொடுக்கவும்]

அன்புள்ள தம்பி,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

நேற்று நான் அனுப்பிய கடிதத்தை படித்து இருப்பாய் என்று நம்புகிறேன். 

நீ ஒரு முஸ்லிமோடு அதிகமாக நட்பாக இருக்கிறாய், உங்கள் இருவரின்  நட்பு அதிகமாக உள்ளது என்று சௌதியில் இருக்கும் என் நண்பன் எனக்கு கூறியபோது, "இதிலென்ன தவறு? எனக்கும் இஸ்லாமியர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள் அல்லவா?" என்று நான் கூறினேன்.  என் தம்பி என்ன குழந்தையா? இவனோடு பேசு அவனோடு பேசாதே என்று கட்டுப்பாடு விதிப்பதற்கு? அவன் நண்பர்களோடு சுதந்திரமாக பழகட்டுமே, சுதந்திரத்திற்கு தடை போடவேண்டாம் என்று நான் என் நண்பனிடம் கூறினேன்.

ஆனால், சில நாட்களுக்கு பிறகு நீ ஒரு மெயில் அனுப்பி "நான் முஸ்லிமாகிவிட்டேன்" என்று கூறினாய், நான் சுயமாக இந்த முடிவை எடுத்தேன் என்றும் கூறினாய். அப்பா அன்று அதிகமாக துக்கப்பட்டார், நான் அவ்வளவு துக்கம் அடையவில்லை, ஏனென்றால் உன்னுடைய பலம் மற்றும் பலவீனம் எது என்று எனக்கு நன்றாகத் தெரியும். நீ சுதந்திரமாக எடுத்த முடிவை நான் மதிக்கிறேன். 

நான் உன்னிடம் ஒரு விஷயத்தை பற்றி கேட்க விரும்புகிறேன்.  நீ சுதந்திரமாக இஸ்லாமை தழுவினாய், அதற்கு உனக்கு சுதந்திரம் இருந்தது. ஆனால், நீ இஸ்லாமை விட்டு வெளியே வர விரும்பினால், அப்படி செய்ய உனக்கு சுதந்திரம் உண்டா? 

உன்னை இஸ்லாமை தழுவும் படி உற்சாகப்படுத்திய உன் நண்பர்கள், நீ மறுபடியும் அதைவிட்டு வெளியேறவேண்டும் என்று விரும்பினால், அவர்கள் உனக்கு எந்த ஒரு தீங்கும் செய்யாமல் வெளியேற அனுமதிப்பார்களா? 

நான் ஏன் இந்த கடிதங்களை எழுதுகிறேன் என்பதை உனக்கு விளக்குகிறேன். நீ நம் குடும்பத்தின் ஒரு அங்கம், நீ எங்கு இருந்தாலும், நன்றாக இருந்தால் அது போதும் எங்களுக்கு. ஆனால்,  ஒரு நாள் கர்த்தரிடத்தில் மறுபடியும் நீ வரவிரும்புகிறாய் என்று வைத்துக்கொள்வோம், அப்போது நீ இஸ்லாமை விட்டு வெளியேற விரும்பினால், இஸ்லாம் இடம் கொடுக்குமா? இஸ்லாமியர்கள் உன்னை வாழவிடுவார்களா? இது தான் என் பயம்.

உனக்கு நெருங்கிய நல்ல நேர்மையான இஸ்லாமிய நண்பன் ஒருவன் இருந்தால், அவனிடம் "ஒரு வேளை நான் இஸ்லாமை விட்டு வெளியேற விரும்பினால், நீங்கள் அனுமதிப்பீர்களா?" என்று கேட்டு அதற்கு அவன் என்ன பதில் சொல்கிறான் என்று கவனித்துப்பார். என் தம்பி இஸ்லாமில் பாதுகாப்பாக இருப்பானா? அவன் வெளியே வரவிரும்பினால் கூட பாதுகாப்பாக இருப்பானா? என்பதை கேட்டு எனக்குச் சொல்வாயா?

இஸ்லாமை விட்டு வெளியேறும் முஸ்லிம்கள் இஸ்லாமிய நாடுகளில் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று சிறிது கவனித்துப்பார்? ஷரியா சட்டம் இஸ்லாமியர்களை என்ன பாடுபடுத்துகிறது என்று கவனித்துப்பார். இஸ்லாமை விட்டு வெளியேறியவர்கள் சந்தித்துக்கொண்டு இருக்கும் பிரச்சனைகளை  செய்தித்தாள்களில் படித்துப்பார்? நீ குழந்தையல்ல, எனவே, அனைத்தையும் சோதித்துப் பார்.

நல்லவேளை நாம் இந்தியாவில் பிறந்தோம், இஸ்லாமிய நாட்டில் பிறக்கவில்லை, அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும். ஆனால், அதிகமாக சந்தோஷப்பட முடியாது, இங்கும் மறைவாக அனேக தீங்குகள் இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு எதிராக நடந்துக்கொண்டு இருக்கிறது. தம்பி, ஒரு மனிதனுக்கு இருக்கும் மிகவும் முக்கியமான பொக்கிஷம், அவன் சுதந்திரமாக வாழுவதும், சுதந்திரமாக முடிவுகளை எடுப்பதுமாகும், இந்த இரண்டும் இந்நாள் வரை உனக்கு இருந்தது, இனி இப்படிப்பட்ட சுதந்திரம் உனக்கு கிடைக்குமோ என்பது தான் என் கேள்வி?

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன். நான் கேட்ட விஷயத்தை மட்டும் உன் நண்பர்களிடம் கேட்டுச் சொல்வாயா? நீ மிகவும் ஜாக்கிரதையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

"சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்

இப்படிக்கு, உன் அண்ணன்,

தமிழ் கிறிஸ்தவன்.

மூலம்

உமரின் ரமளான் மாத தொடர் கட்டுரைகள்