சோனு நிகமை எழுப்பும் பாங்கு சப்தங்கள் - வணக்க ஸ்தலங்களிலிருந்து வரும் அதிக சத்தங்களை சகித்துக்கொள்வது மதசகிப்புத் தன்மையை காட்டுமா?

இந்த வாரம் பாடகர் சோனு நிகம் மற்றும் அவருக்காக கொடுக்கப்பட்ட இஸ்லாமிய ஃபத்வா பற்றி நாம் செய்திகளில் வாசித்துக்கொண்டு இருக்கிறோம். முதலில் அந்த செய்திகளில் வந்த விவரங்களை சுருக்கமாக காண்போம், அதன் பிறகு சர்ச்சுக்கள், கோயில்கள் மற்றும் மசூதிகளிலிருந்து வரும் சத்தங்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ள யார் நமக்கு உதவி செய்வார்கள் என்பதைக் காண்போம்.

செய்தி 1: முஸ்லீம் அல்லாத நான் ஏன் பாங்கு சப்தம் கேட்டு எழுந்திருக்கணும்?: பாடகர் சர்ச்சை ட்வீட்

அனைவரையும் ஆசிர்வதிப்பாராக. நான் முஸ்லீம் அல்ல ஆனால் நான் தினமும் காலை பாங்கு சப்தம் கேட்டு எழுகிறேன். இந்த கட்டாய மத திணிப்பு இந்தியாவில் எப்பொழுது முடியும் என ட்வீட்டியுள்ளார் சோனு நிகம்.

முகமது இஸ்லாத்தை உருவாக்கியபோது மின்சாரம் இல்லை. எடிசனுக்கு பிறகு இந்த சப்த தொல்லைகள் எனக்கு ஏன்? என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சோனு

ஒரு மதத்தை பின்பற்றாதவர்களை எழுப்பிவிட மின்சாரத்தை பயன்படுத்தும் எந்த கோவில் அல்லது குருத்வாரா மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை.

செய்தி 2: Maulvi Issues Fatwa Against Sonu Nigam, Offers Rs 10 Lakh For Shaving His Head!

Syed Sha Atef Ali Al Quaderi, vice president, West Bengal Minority United Council was quoted in the report saying, 

“If anyone can shave his hair, put a garland of old torn shoes around his neck and tour him around the country I personally announce an award of Rs 10 lakh for that person.”

At a press conference that was held by the Maulvi, he said that no one has the right to hurt the religious sentiments of people. He said,

“I would have reacted the same way if one had talked ill about the sound of bells coming from a temple as well. If we all become so intolerant about each other’s religions, we will soon have a bunch of atheists in our country. People like Nigam should be driven out of the country.”

செய்தி 3: யூடியூப் வீடியோ - Sonu Nigam to go for hair cut, asks Maulvi Aatif Ali Kadri to keep Rs.10 lakh

மூலம்: www.youtube.com/watch

1. சோனு நிகமும் பாங்கு சப்தமும்:

மேற்கண்ட செய்தியில் வாசித்தது போல, மசூதிகளிலிருந்து வரும் பாங்கு சப்தம் தன்னை  அதிகாலை எழுப்பிவிடுகிறது என்று சோனு நிகம் தன் கருத்தைச் சொல்லியிருக்கிறார். மசூதி மட்டுமல்ல, இதர இந்துக் கோயில்களிலிருந்து வரும் இப்படிப்பட்ட சப்தமும் சரியானது அல்ல என்றும் சொல்லியுள்ளார். இப்படி சொல்லும் போது, இது ரவுடித்தனம் (ஹிந்தியில்  கூண்டாகிரி) என்றும் குறிப்பிட்டுள்ளார்.  இதனால் கோபம் கொண்ட ஒரு மௌலவி, ஃபத்வா கொடுத்தார். சோனு நிகமை மொட்டை அடித்து, பழைய செருப்பு மாலை அணிவித்து, அவரை ஊர்வலமாக கொண்டுச் செல்பவருக்கு 10 லட்சம் தருவதாக ஃபத்வா கொடுத்தார். இதற்கு பதிலடி கொடுக்க சோனு நிகம், தன் நண்பனை அழைத்து, மொட்டை அடித்துக் கொண்டார். சோனு நிகமை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் தங்கள் கருத்தைச் சொல்லியுள்ளார்கள். இது தான் செய்தி.

இக்கட்டுரையின் கருப்பொருள் சோனு நிகம் சரியா? அந்த மௌலவி சரியா? என்பது பற்றி ஆய்வு செய்வதல்ல. ஒலி மாசு (Noise/Sounce pollution) எப்படி சர்ச்சுக்கள், கோயில்கள் மற்றும் மசூதிகளிலிருந்து  வருகிறது, அவைகளிலிருந்து தப்பிக்க என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றியதாகும். ஒலி மாசு பற்றி அறிய அடிக்குறிப்பில் கொடுக்கப்பட்ட விக்கீப்பீடியா தமிழ்  தொடுப்பை சொடுக்கி படித்துக் கொள்ளுங்கள்[1].

2. சர்ச்சுக்கள், கோயில்கள் மற்றும் மசூதிகளிலிருந்து வரும் சப்தங்கள்

எங்கள் சபை விசுவாசி ஒருவர், தான் குடியிருந்த தன் சொந்த வீட்டிலிருந்து புதிய வீட்டிற்கு குடும்பத்தை மாற்றினார். சபை போதகரும், இதர சபை நண்பர்களும் சென்று ஜெபம் செய்துவிட்டு வந்தோம். ஏன் நீங்கள் அந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, இந்த வீட்டிற்கு மாறிவிட்டீர்கள் என்று கேட்டபோது, அவர் சொன்ன காரணம், ”தன் பக்கத்து தெருவில் உள்ள மசூதியிலிருந்து வரும் பாங்கு சம்தம் தான்” என்றார். அதிகாலை, அவர்களை தூங்க விடாமல் தொல்லை தருகிறது அந்த பாங்கு சப்தம் என்றும் இதனால் தன் வீட்டில் அனைவருக்கும் தூக்கம் கெடுகிறது, முக்கியமாக தன் பெற்றோருக்கு அதிக தொல்லையாக இருக்கிறது என்றார். (இதை படிக்கும் முஸ்லிம்கள் கோபம் கொள்ளவேண்டாம், கொஞ்சம் பொறுமையாக படியுங்கள், எல்லா மதத்தவரின் வணக்க ஸ்தலங்களிலிருந்தும் இப்படிப்பட்ட சத்தம் வருகிறது, தொடர்ந்து படியுங்கள்). 

நான் வாடகை வீடுகளில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்தேன். வேலையின் காரணமாக வாடகை வீட்டை இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றும் போது, வீட்டு தரகருக்கு நான் சொல்லும் ஒரு நிபந்தனை, “வீடு பக்கத்தில், அல்லது அதே தெருவில்  சர்ச்சோ(!), மசூதியோ, கோயிலோ, பள்ளிக்கூடமோ, இரயில் தண்டவாளமோ இருக்கக்கூடாது” என்பதாகும். இரவு பத்து மணிக்கு மேலே அமைதியாக தூங்கச் செல்லவேண்டும் என்று விரும்புவது தவறா? விடுமுறை நாட்களில் அமைதியாக வீட்டில் நேரத்தை கழிக்கவேண்டும் என்று விரும்புவது தவறா? 

நான் வளர்ந்த எங்கள் ஊரிலே, எங்கள் வீட்டிற்கு 100 அடி தூரத்தில் ஒரு கோயில் உள்ளது. அந்த கோயிலிலிருந்து அதிகாலையிலும், மாலையிலும், இன்னும் இதர பண்டிகை நாட்களிலும் வரும் மந்திர சத்தங்கள் காதை பிளக்கும். சில நேரங்களில் கோபம் வரும், வேறு வழியில்லாமல் ஜன்னல்களை கதவுகளை சாத்திவிட்டு தூங்குவோம். இதனால் தான் நான் வேலை செய்யும் ஊரிலாவது சத்தமில்லாத வாடகை வீடு வேண்டும் என்று நான் தெரிவு செய்தது.

நான் லண்டனில் இருந்த போது, ஒரு தமிழ் சபைக்கு ஆராதனைக்கு சென்றுக்கொண்டு இருந்தேன். ஒரு நாள் முழு இரவு ஜெபத்தின் போது, சில பாடல்களை பாடி ஆராதிக்கலாம் என்று நான் சொன்ன போது, இசைக் கருவிகளை(டிரம்ஸ்)க் கொண்டு பாடவேண்டாம், என்று அந்த போதகர் தடுத்துவிட்டார். ஏன் என்று கேட்டபோது, சத்தம் சபைக்கு வெளியே வந்தால், ஐந்து நிமிடங்களில், சபைக்கு உள்ளே போலிஸ் வந்துவிடும், நமக்கு வார்னிங் கொடுத்துச் செல்வார்கள், கேட்காத பட்சத்தில் கைது செய்வார்கள் என்றுச் சொன்னார். இப்படி நடந்தும் உள்ளது என்றுச் சொன்னார். சபைக்கு பக்கத்தில் வாழும் மக்களின் தூக்கம் சபையிலிருந்து வரும் சத்தத்தினால் கெடக்கூடாது என்பது அங்குள்ள சட்டம் என்றுச் சொன்னார். இதுவும் சரியானது தானே, இதிலே எந்த  தவறும் இல்லை. 

[இந்தியாவிலும் இந்த சட்டம் (சத்தம்) உள்ளது என்று எனக்குத் தெரியும், ஆனால் யார் இதனை காது கொடுத்து இந்த சட்டத்தை (சத்தத்தை) மதிக்கிறார்கள்? கோயிலிலிருந்து/சர்ச்சிலிருந்து சத்தம் வருகிறது என்று புகார் செய்தால், நீ முஸ்லிம் அதனால் பொய்யான புகார் செய்கிறாய் என்றுச் சொல்கிறார்கள். மசூதிலிருந்து தினமும் ஐந்து வேளை சத்தம் வருகிறது என்றுச் சொன்னால், மொட்டை அடித்து, செருப்பு மாலை போடப்படும் என்று மிரட்டல்கள் வருகிறது. அதனால் தான் யாரும் சத்தம் போடாமல், அமைதியாக! தங்கள் காதுகளை கிழிக்கும் சத்தங்களை சகித்துக்கொண்டு இருக்கிறார்கள்].

சர்ச்சுக்கள், மசூதிகள் மற்றும் கோயில்களுக்கு பக்கத்தில் வாழும் மக்களிடம் கேட்டுப்பார்த்தால் தான், அவைகளிலிருந்து வரும் சத்தங்கள் எப்படி அவர்களின் நிம்”மதி”யை கெடுக்கிறது என்பதைப் பற்றி நாம் சரியாக அறிந்துக் கொள்ள முடியும்.

3. கிறிஸ்தவனாக இருந்தும், சபை பக்கத்தில் வீட்டை தெரிவு செய்யாதது ஏன்?

நான் கிறிஸ்தவன், தவறாமல் ஒவ்வொரு ஞாயிறும் சபைக்குச் சென்று ஆராதித்து வருகிறேன். இதர நாட்களில் நடத்தப்படும் கூட்டங்களுக்கும் என்னால் முடிந்தவரை சென்று வருகிறேன். ஆனால், கிறிஸ்தவ சபைகளுக்கு பக்கத்தில் வீடு கிடைத்தால், நான் அதனை வாடகைக்கு எடுத்துக் கொள்ளமாட்டேன். ஏனென்றால்,  பாடல் மற்றும் இசைச் சத்தம், சில நேரங்களில் சபையை விட்டு வெளியே வரும், எனவே, சபையை விட்டு தூரமாக இருப்பதே நல்லது. சத்தம் வெளியே வராமல் இருப்பதற்கு சில சபைகளில் பல ஏற்பாடுகளை செய்து இருக்கிறார்கள்.  இப்படிப்பட்ட சபைகளின் பக்கத்தில் இருக்கலாம், எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.

இப்படி நான் எழுதுவதினால், நான் என் சபையை நேசிக்கவில்லை என்று அர்த்தமல்ல, சபைகளை நடத்துபவர்கள், தங்கள் சபைகளிலிருந்து அதிக சத்தம் வெளியே சென்று அயலகத்தார்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். 

4. இயேசுவின் பொன் வாக்கு 

கிறிஸ்தவர்களாகிய நாம் எதைச் செய்தாலும், இயேசுவின் அந்த பொன் வாக்கை மனதில் வைத்தவர்களாக செய்யவேண்டும். அது என்ன ‘பொன் வாக்கு’ என்று கேட்பீர்களாகில், கீழ்கண்ட வசனத்தை படியுங்கள்:

மத்தேயு 7:12  ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.

உன் அயலகத்தான் உன் தூக்கத்தை கெடுக்கக்கூடாது என்று நீ விரும்பினால்,  முதலாவது நீ அவன் தூக்கத்தை கெடுக்கக்கூடாது. நீ முழு இரவு ஜெபம் என்றுச் சொல்லி, சத்தமாக பாட்டு பாடி, ஆராதனைச் செய்து, லௌட் ஸ்பீக்கர் மூலமாக சத்தமாக ஜெபம்/பிரசங்கம் செய்து, மற்றவனின் தூக்கத்தை கெடுத்துவிட்டு சபையை முடித்துக்கொண்டு, அதிகாலை 2 மணிக்கு உன் வீட்டுக்குச் சென்று தூங்கினால், அதிகாலை, உன் தூக்கத்தை கெடுக்க உன் தெருவில் இருக்கும் மசூதியிலிருந்து பாங்கு சத்தம் வரும் என்பதை மனதில் வை. அந்த முஸ்லிம் பாங்குச் சொல்லி, அல்லாஹ்வை தொழுதுவிட்டு, விட்டிற்குச் சென்று தூங்கும் போது, அவன் தெருவில் உள்ள கோயிலிலிருந்து மந்திர சத்தங்கள், கோயில் மணியோசைகள் ஸ்பீகர்கள் மூலமாக அவன் தூக்கத்தை கெடுத்துவிடும்.

உன் தூக்கத்தை மற்றவன் கெடுத்தால் உனக்கு எரிச்சல் வருவது நியாயமென்றால், மற்றவனுக்கு உன் மூலமாக  எரிச்சல் வருவதும் நியாயம் தான். கிறிஸ்தவர்கள் திருச்சபைகளை கட்டும் போது, அதிக சத்தம் வெளியே வராமல் இருக்கும்படியான வசதிகளைச் செய்யவேண்டும்.

முதலாவது முஸ்லிம்கள் மசூதிகளிலிருந்து வரும் சத்தத்தை (பாங்கு சப்தம், மற்றும் ஜும்மா பிரசங்க சத்தம்) குறைக்கட்டும். இரண்டாவது, இந்துக்கள் கோயில்களிலிருந்து வரும் மந்திரச் சத்தங்களை குறைக்கட்டும், அதன் பிறகு நான் என் திருச்சபையின் சத்தத்தை குறைக்கிறேன் என்றுச் சொல்லவேண்டாம். மற்றவர்கள் சரியான வழியில் நடக்கிறார்களா என்பது கேள்வியில்லை, கிறிஸ்தவர்கள் சரியான வழியில் இயேசு காட்டிய வழியில் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாத வழியில் நடக்கிறார்களா என்பது தான் கேள்வி. முதலில் நம் கண்களில் இருக்கும் உத்திரத்தை எடுத்துப்போடவேண்டும், அதன் பிறகு மற்றவர்களின் கண்களில் உள்ள துரும்பை எடுத்துப்போட நாம் முயன்றுப் பார்க்கலாம்.

7:3  நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? 7:4  இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? 7:5  மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய். (மத்தேயு 7:3-5)

சபையைச் சுற்றியுள்ள மக்களுக்கு இயேசுவின் மீது நல்ல எண்ணம் வந்தால் தானே, அவரது நற்செய்தியை அவர்கள் காதுகொடுத்து கேட்பார்கள் (நாம் லௌட் ஸ்பீகரில் பேசும் போதல்ல,  நேருக்கு நேர் பேசும் போது)?

5. மௌலவியின் ஃபத்வா சரியா?

பொதுவாக முஸ்லிம் மத தலைவர்கள் ஃபத்வா கொடுப்பதில் இரண்டு நன்மைகள் இஸ்லாமுக்கு மறைமுகமாக கிடைக்கிறது. முதலாவதாக, இவரது ஃபத்வா பற்றி அறிந்து முஸ்லிம்கள் இவருக்கு ஆதரவு கொடுப்பார்கள். இவரது ஃபத்வா நியாயமாக/அநியாயமாக கொடுக்கப்பட்டதா? என்று சிந்திக்கமாட்டார்கள், இஸ்லாமுக்காக இவர் பேசுகின்றார் எனவே இவரை ஆதரிக்கவேண்டும், இது தான் பெரும்பான்மையான  முஸ்லிம்களின் நிலைப்பாடு. இரண்டாவதாக, இப்படிப்பட்ட சின்ன சின்ன விஷயத்துக்கு எதிர்ப்பை தெரிவித்து, ஃபத்வா கொடுத்தால், எதிர் காலத்தில் இஸ்லாமை விமர்சிப்பவர்களுக்கு இதனால் பயமுண்டாகும். எனவே இஸ்லாமை விமர்சிப்பவர்கள் அதிகமாக சிந்தித்து செயல்படுவார்கள்.

ஆனால், இப்படிப்பட்ட ஃபத்வாக்களினால், இஸ்லாம் பற்றிய ஒரு தவறான கருத்து நாட்டு மக்களின் மனங்களில் ஆழமாக பதிந்துவிடுகிறது. இப்படிப்பட்ட மௌலவிகளின் நேர்க்காணல்களை விவாதங்களை தொலைக்காட்சிகளில் பார்க்கும் கோடிக்கணக்கான முஸ்லிமல்லாதவர்களின் மனதில் ‘இஸ்லாம் பற்றிய எதிர்மறையான கருத்து விதைக்கப்பட்டுவிடுகிறது’. இது இஸ்லாமுக்கு நல்லதல்ல என்று முஸ்லிம்கள் உணரவேண்டும்.

சோனு நிகம் மீது ஃபத்வா விதித்த மௌலவி, ”மொட்டை அடித்தல், செருப்பு மாலை போடுதல், 10 லட்சம் பரிசு கொடுத்தல்” போன்ற ஃபத்வாக்கள் கொடுக்காமல், வேறு வகையான முறையில் தன் எதிர்ப்பை தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இதனை மௌலவிகளால்  செய்யமுடியாது, ஏனென்றால், அவர்களால் ‘அமைதியான முறையில் போராடுவது, எதிர்ப்பை தெரிவிப்பது’ போன்ற வழிமுறைகளை சிந்திக்க முடியாது என்பது தான் உண்மை.

முடிவுரை:

மசூதியோ, சர்ச்சோ, கோயிலோ கொஞ்சம் சத்தத்தை குறைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும். பல வகையான நம்பிக்கைகளைக் கொண்ட  இந்திய மக்கள் கொஞ்சம் நியாயமான முறையில் சிந்தித்து செயல்படவேண்டும். 

பல ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வெளியே யாருக்குமே தொந்தரவு இருக்கக்கூடாது என்று கட்டப்பட்ட திருச்சபையைச் சுற்றி, இன்று வீடுகள் வந்துவிட்டால், சத்தம் வெளியே வராமல் பார்த்துக் கொள்ளவேண்டியது, அந்த திருச்சபை போதகரின் கடமையாகும். 

இதர மார்க்க மக்கள் வாழும் இடங்களில் கட்டப்பட்ட மசூதிகளிலிருந்து எழுப்பப்படும் பாங்கு சப்தம் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கின்றதா? என்பதை கவனித்து, அதிக சத்தத்தை அவர்களாகவே குறைத்துக் கொண்டால் நல்லது. 

இதே போல இந்து கோயில்களிலிருந்து வரும் சத்தம் மக்களை தூங்கவிடாமல் தொல்லை தருகின்றதா என்பதை கவனித்து நடந்துக் கொண்டால், மிகவும் நல்லது.

கிறிஸ்துமஸ் காலங்களில் விசுவாசிகளின் வீட்டிற்கு கேரல் போகும் போது (பாடல்களை பாடிக்கொண்டு ஊர்வலமாக செல்லும் போது), மாலை ஆறு மணிக்கு முன் முடித்துவிடவேண்டும், மக்கள் தூங்கிவிட்ட பிறகு நாம் சென்று மற்றவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று என் சபை போதகர் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார். கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளுக்குச் சென்றாலும்   நாம் இந்த நேரத்தை கடைபிடிக்க வேண்டும் என்பது அவரது கட்டளை.

உன் அயலானின் மனதை துக்கப்படுத்திவிட்டு, அந்த மனதில் இயேசு வரவேண்டும் என்று நீ விரும்பினால் அது நடக்குமா? 

கிறிஸ்தவர்கள் இயேசுவிற்கு முன்பாக நியாயத்தீர்ப்பு நாளில் நிற்கும் போது, ‘நான் பசியாக இருந்தேன், எனக்கு நீ உணவு கொடுக்கவில்லை, நான் அதிக சத்தத்தினால் தூங்கமுடியாமல் தவித்தேன், என் உணர்வுகளை புரிந்துக்கொண்டு, நீ சத்தத்தை குறைத்துக் கொள்ளவில்லை’ என்று சொன்னால், நாம் அவருக்கு என்ன பதில் கொடுப்போம்? 

”சிந்தியுங்கள், செயல்படுங்கள்” மன்னிக்கவும், ”சிந்திப்போம் செயல்படுவோம்”. 

அடிக்குறிப்புக்கள்:

[1] ஒலி மாசு - ta.wikipedia.org/s/of8

ஒலி மாசு (அல்லது சுற்றுசூழலில் மிகையான சத்தம்) என்பது மனதிற்கு ஒவ்வாத மனிதன்-, கால்நடைகள்- அல்லது இயந்திரங்கள் பிறப்பிக்கும் இரைச்சல் அல்லது ஓலியாகும், அது மனிதனின் வாழ்க்கை முறைகளையும், விலங்குகளின் வாழ்க்கை முறைகளையும், அவர்களின் செயல்பாடுகளையும் வெகுவாக பாதிக்கின்றது. பொதுவாக நம்மை இக்காலத்தில் வெகுவாக பாதிக்கும் ஓலி மாசு, இன்றைய சூழ்நிலையில் போக்குவரத்தின் காரணமாகும், குறிப்பாக தானுந்து, பேருந்து போன்ற மோட்டார் வாகனங்கள்.[1] ஒலி என்று பொருள் படும் ஆங்கில சொல்லான நாய்ஸ் என்ற வார்த்தை லத்தீன் மொழியில் நாசியா என்ற வார்த்தையை மூலமாக கொண்டது ஆகும், அதன் பொருள் கடலில் வாழ்வதால் ஏற்படும் ஏக்க நோய் ஆகும்.

உலகெங்கும் பரவலாக இரைச்சல் சத்தம் போக்குவரத்து வாகனங்களால் ஏற்படுகின்றன, தானுந்து, பேருந்துகளில் இருந்து வரும் சத்தம் மட்டும் அல்லாமல் இதில் விமானங்கள் பறப்பதாலும், ரயில் வண்டிகள் ஓடுவதாலும் விளையும் சத்தம் அடங்கும்.[1][2][3].குறைகள் நிறைந்த நகரத் திட்டங்களாலும் மிகுந்த இரைச்சல் காரணம் ஒலி மாசு ஏற்படுவதுண்டு, ஏன் என்றால் குடியிருப்பு கட்டிடங்கள் தொழில் செய்யும் பட்டறை கட்டிடங்கள் அருகாமையில் இருந்தால், அதனால் குடியிருப்பு பகுதிகளில் சத்தம் மிகுதியால் ஒலி மாசு ஏற்பட வாய்ப்புக்கள் உண்டாகும்.

வாகனங்களின் ஹாரன் ஓசை, அலுவலகங்களில் பயன்படும் கருவிகள், ஆலை இயந்திரங்கள், கட்டிட பணிகள், தரையை சுத்தம செய்யும் இயந்திரங்கள், குரைக்கும் நாய்கள், கருவிகள், மின் விசைகள், ஒளிபரப்பு கருவிகள், விசைகள், ஒலிபெருக்கி, மின்சார விளக்குகள் எழுப்பும் ஒலி, ஆடல் பாடலுக்கான பொழுதுபோக்கு சாதனங்கள், மேலும் சத்தம் போட்டு பேசும் மனிதர்கள், ஆகியவை அனைத்தும் வீட்டின் உள்ளும், வீட்டின் வெளியேயும், இரைச்சல் உண்டாவதற்கான காரணிகளாகும்.


உமரின் இதர தலைப்புகளில் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்