அல்லாஹ் மீதுள்ள அவதூறுகளை களைவோம்!

பாகம் 2: முஹம்மது மூலமாக ஒரு அற்புதத்தையும் அல்லாஹ் செய்யவில்லை!

முந்தைய கட்டுரையை இங்கு சொடுக்கி படிக்கவும்.

எதிரிகளுக்கு முன்பாக, முஹம்மது மூலமாக ஒரு அற்புதத்தையும் அல்லாஹ் செய்துக்காட்டவில்லை என்று குர்‍ஆன் சொல்வது அல்லாஹ்விற்கு மிகப்பெரிய அவதூறு ஆகும்.  

அல்லாஹ் தன் முந்தைய நபிகள் மூலமாக பெரிய அற்புதங்களைச் செய்தான். 

இப்றாஹீம்: இந்த நபியை நெருப்பில் போட்டாலும், அவர் மீது நெருப்பு வேலை செய்யாமல்  பார்த்துக்கொண்டான், எதிரிகளுக்கு முன்பாக அற்புதமாக பாதுகாத்தான். பார்க்க குர்‍ஆன் 21:68-70

மூஸா: இவர் மூலமாக செங்கடலை பிளந்தான், வானத்திலிருந்து அடையாளங்களைச் செய்து, எகிப்தின் அரசனுக்கு முன் தன் நபியின் (மூஸாவின்) நபித்துவத்தை நிருபித்தான்.

சுலைமான்: தாவுத் நபியின் மகனான சுலைமான் நபிக்கு, பல சக்திகளை அல்லாஹ் கொடுத்திருந்தான். ஜின்கள் இவருக்குகாக வேலை செய்யும் படி செய்தான்.

ஈஸா: குர்‍ஆனில் இந்த நபி பற்றி சொல்லும் போது, இவர் மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார், வியாதியுள்ளவர்களை சுகமாக்கினார், குழந்தையாக இருக்கும் போதே ஒரு மண்ணினால் பறவை செய்து அதற்கு உயிர் கொடுத்தார் என்றும் சொல்கிறது. இதையெல்லாம் அல்லாஹ் தான் செய்வித்தான் என்று குர்‍ஆன் சொல்கிறது. 

குர்‍ஆனிலிருந்து இன்னும் அனேக இப்படிப்பட்ட உதாரணங்களைச் சொல்லலாம்.  இப்படி ஒவ்வொரு நபிக்கும் அற்புதங்களை வாரி வழங்கிய அல்லாஹ், தன் கடைசி நபி முஹம்மது என்று வரும் போது ஒரு அற்புதமும் செய்யமுடியாது என்று அடம்பிடித்ததாக குர்‍ஆன் சொல்கிறது. இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமுடியாது, யாரோ குர்‍ஆனில் கைவைத்து, முஹம்மதுவிற்கு அல்லாஹ் செய்த அற்புதங்களை நீக்கி இருக்கிறார்கள்.

இதுமட்டுமல்ல, ஹதீஸ்கள் கூட முஹம்மது அனேக அற்புதங்களைச் செய்ததாக கூறுகிறது, ஆனால் குர்‍ஆன் மட்டும் 'முஹம்மது அற்புதம் செய்ய வரவில்லை, அவர் எச்சரிக்க வந்தார்' என்று அடித்துச் சொல்கிறது.

இதைப் பற்றி குர்‍ஆன் என்ன சொல்கிறது என்பதை சுருக்கமாக காண்போம்.

முஹம்மது அற்புதங்கள் செய்யமாட்டார், அவர் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே என்று அடித்துச் சொல்லும் குர்-ஆன்

முஸ்லிம்களின் நம்பிக்கைப்படி குர்-ஆன் பிழையற்ற வேதமாகும். குர்‍ஆனுக்கு அடுத்தபடியாகத் தான் ஹதீஸ்கள். இந்த ஹதீஸ்களில் சிலவற்றை இன்றும் முஸ்லிம்கள் மறுக்கிறார்கள் ஏனென்றால், அவைகளில் கட்டுக்கதைகளும், பொய்களும் அதிகமாக இருப்பதினால் தான்.  முஹம்மது தன் நபித்துவத்தை நிரூபிக்க எதிரிகளுக்கு முன்பாக எப்போதாவது ஒரே ஒரு அற்புதமாவது செய்தாரா என்பதை குர்-ஆனிலிருந்து பார்ப்போம்.

1) அற்புதங்கள் செய்யாமல் தட்டிக்கழிக்கும் அல்லாஹ்

முஹம்மதுவிடம் குறைஷிகள் மற்றும் யூதர்கள் அற்புதங்களைக் கேட்டார்கள். நீங்கள் அற்புதங்களைச் செய்தால், உங்களை ஒரு நபி என்று நம்புவதற்கு வாய்ப்பு உண்டாகும் என்று அவர்கள் சொன்னார்கள். எத்தனை முறை இப்படி கேட்டாலும், அல்லாஹ் ஒரு அற்புதமும் செய்யாமல் எல்லா நேரங்களிலும் தட்டிக்கழித்தார். இதற்கு காரணங்களையும் சொன்னார், அதாவது, முந்தைய கால மக்களைப்போல, இவர்களும்  நம் அத்தாட்சிகளை ஏற்கமாட்டார்கள் எனவே, அவைகளைச் செய்வதினால் ஒரு நன்மையும் இல்லை. எனவே, முஹம்மதுவின் மூலமாக ஒரு அற்புதத்தையும் செய்வதில்லை என்று கராராக குர்-ஆனில் அல்லாஹ் சொல்லிக்காட்டுகின்றான்.   கீழ்கண்ட குர்-ஆன் வசனங்களில் அல்லாஹ் சொல்லும் காரணங்களைக் காணுங்கள். ஒரு பேச்சுக்காகவாவது ஒரே ஒரு அற்புதமும் கூட செய்துக் காட்ட அல்லாஹ் விரும்பவில்லை. 

2:118. இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ் ஏன் நம்மிடம் பேசவில்லை; மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை?” என்று; இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்.

2:145. வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்;; நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றுபவர் அல்லர்; இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர்; எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.

6:37. (நமது விருப்பம் போல்) ஓர் அத்தாட்சி அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது இறக்கப்பட வேண்டாமா? என்று அவர்கள் கேட்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்: “நிச்சயமாக அல்லாஹ் (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கி வைக்க வல்லமையுடையவனே; எனினும் அவர்களில் பெரும்பாலோர் அதை அறிந்து கொள்வதில்லை”

6:109. (நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்கள், அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து, தங்களுக்கு ஓர் அத்தாட்சி வந்துவிடுமானால் தாம் நிச்சயமாக அதைக் கொண்டு ஈமான் கொள்வதாக கூறுகிறார்கள். (நபியே!) அவர்களிடம்) நீர் கூறும்: அத்தாட்சிகள் யாவும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. அந்த அத்தாட்சிகள் வரும்பொழுது நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள் என்பதை உங்களுக்கு எது அறிவித்தது? 

முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்

2) அற்புதம் கேட்கும் மக்களுக்கு என்ன பதில் சொல்லவேண்டும்?

முஹம்மது தம்மிடம் அற்புதம் எதிர்ப்பார்க்கும் மக்களிடம் என்ன சொல்லவேண்டும் என்று அல்லாஹ் முஹம்மதுவிற்கு இந்த பத்தாவது ஸூராவில் கட்டளையிடுகின்றான். அதாவது அற்புதங்கள் அல்லாஹ்விடம் உள்ளன, அவைகளுக்காக நீங்களும் காத்திருங்கள், நானும் காத்திருக்கிறேன் என்று முஹம்மது சொல்லவேண்டுமாம்.

10:20. “மேலும் அவர்கள், இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள். அதற்கு “மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

குறிப்பு: 2:118, 2:145 - இந்த‌ இரண்டாவது ஸூரா மதினாவில் இறங்கியதாகும் (மதனீ). சந்திரன் பிளந்த அற்புதம் உள்ளது என்றுச் சொல்லும் ஸூரா (54) மக்காவில் இறங்கியதாகும். மக்காவிலேயே ஆரம்ப காலத்தில் (முஹம்மது தம்மை நபியாக காண்பித்துக்கொண்ட நான்கு ஆண்டுகளுக்குள்), முஹம்மது இந்த ஒரு அற்புதம் செய்திருந்தால், ஏன் மதினாவில் இருக்கும் போது இறங்கிய இரண்டாவது ஸூராவில் அற்புதங்கள் எல்லாம் செய்யமுடியாது என்று அல்லாஹ் சொல்லப்போகிறான்? இதிலிருந்து நாம் எவைகளை அறிகிறோம்? முஹம்மது மக்காவில் இருக்கும் போது நடந்ததாகச் சொல்லும் அற்புதம் நடக்கவில்லை என்பதைத் தானே. மக்காவில் செய்த அற்புதத்தை அல்லாஹ் மறந்துவிட்டிருக்கலாம் அல்லவா? என்று முஸ்லிம்கள் கேள்வி கேட்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். 

3) முஹம்மது வெறும் எச்சரிக்கை செய்பவர், அற்புதங்கள் செய்பவர் அல்ல

குர்-ஆன் 13:7ஐ பாருங்கள், முஹம்மது வெறும் ”அச்சமூட்டி எச்சரிப்பவர் மட்டுமே” என்றுச் சொல்கிறது. மக்கள் எவ்விதமான அத்தாட்சி, அற்புதங்கள் கேட்டாலும், அதை முஹம்மது மூலமாக செய்துக் காட்ட முடியாது என்று அல்லாஹ் சொல்லிவிடுகின்றான்.

13:7. இன்னும் (நபியே! உம்மைப்பற்றி இந் நிராகரிப்போர் “அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள்; நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர், மேலும், ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு.  

4) அற்புதங்கள் இல்லையென்று துக்கப்படவேண்டாம் முஹம்மதுவே!

”முஹம்மதுவே, மக்கள் ஓயாமல் அற்புதங்கள் கேட்கிறார்கள், ஆனால், நான் செய்வதில்லை, இதற்காக நீர் துக்கப்படவேண்டாம். ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும், உம்மை அற்புதம் செய்ய நான் அனுப்பவில்லை, வெறும் எச்சரிக்கை செய்யவே அனுப்பினேன் என்பதை மறக்கவேண்டாம்” என்று அல்லாஹ் முஹம்மதுவிடம் கூறி அவரை ஆறுதல்படுத்துகிறான், பார்க்க குர்-ஆன் 11:12.

11:12. (நபியே! நம் வசனங்களை அவர்கள் செவிமடுப்பதில்லையே எனச் சடைந்து) வஹீ மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டுவிட எண்ணவோ, “அவர் மீது ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு மலக்கு வர வேண்டாமா?” என்று அவர்கள் கூறுவதினால் உம் இதயம் (சஞ்சலத்தால்) இடுங்கியிருக்கவோ கூடும்; நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறில்லை; அல்லாஹ் எல்லா பொருட்களின் மீதும் பொறுப்பாளனாக இருக்கிறான்.

5) அற்புதங்கள் கேட்பவர்களிடம் 'நேர்வழியிலும் தவறான வழியிலும் நடத்துபவன் அல்லாஹ்' என்று சொல்லிவிடும்:

உம்மிடம் அற்புதங்கள் கேட்பவர்களிடம், ” நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிகெடச்செய்கிறான்; தன் பால் எவர் திரும்புகிறாரோ அத்தகையோருக்கு நேர் வழிகாட்டுகிறான்” என்றுச் சொல்லிவிடுங்கள் என்று அல்லாஹ் சொல்கின்றான், பார்க்க 13:27.

13:27. “இவருக்கு இவருடைய இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சி இறக்கி வைக்கப்படக் கூடாதா” என்று நிராகரிப்போர் கூறுகிறார்கள், (நபியே!) நீர் கூறும்: “நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிகெடச்செய்கிறான்; தன் பால் எவர் திரும்புகிறாரோ அத்தகையோருக்கு நேர் வழிகாட்டுகிறான்” என்று.

மக்கள் அற்புதங்கள் கேட்டால், அதற்கு நேரடியாக பதில் சொல்வதை விட்டுவிட்டு, தேவையில்லாத பதிலைச் சொல்லும் படி அல்லாஹ் முஹம்மதுவிற்கு கட்டளையிடுகின்றான்.  மக்கள் கேட்ட கேள்வி என்ன, அல்லாஹ் சொன்ன பதில் என்ன? கவனித்தீர்களா? அற்புதம் செய்யமுடியும் என்றோ, முடியாது என்றோ சொல்லவேண்டுமே ஒழிய, சம்மந்தமே இல்லாமல் பதில் சொல்வது அறிவுடமையாக தெரிகின்றதா?

6) மக்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவே  அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை:

உம்முடைய நபித்துவத்தை நிரூபிக்க நான் அத்தாட்சிகளை அனுப்பமாட்டேன். ஆனால், மக்களை பயமுறுத்தவும், எச்சரிக்கைச்  செய்யவுமே அற்புதங்களைச் செய்வேன் என்று தெளிவாக அல்லாஹ் சொல்கின்றான். பார்க்க குர்-ஆன் 17:59

17:59. (நம்முடைய அத்தாட்சிகளை இவர்களுக்கு) முந்தியவர்களும் பொய்ப்பித்ததைத் தவிர (வேறு எதுவும் இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்ப நம்மைத் தடுக்கவில்லை; (இதற்கு முன்) நாம் “ஸமூது” கூட்டத்தாருக்கு ஒரு பெண் ஒட்டகத்தைக் கண்கூடான அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம்; அவர்களோ (வரம்பு மீறி) அதற்கு அநியாயம் செய்தனர்; (மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை.

மக்கள் எத்தனை முறை கேட்டலும் சரி, அல்லாஹ் முஹம்மதுவின் நபித்துவத்தை நிரூபிக்க அற்புதங்களைச் செய்வதாக இல்லை. இதனை மேற்கண்ட வசனங்கள் தெளிவாகச் சொல்கின்றன. இதனை எந்த ஒரு முஸ்லிமாவது மறுக்கமுடியுமா?

7) குர்-ஆன் மட்டுமே அற்புதமாகும், இது போதாதா அவர்களுக்கு?

இன்னும் ஒரு இடத்தில் அல்லாஹ் மிகவும் தெளிவாக மறுப்பதைக் காணமுடியும். முஹம்மது வெறும் எச்சரிக்கை செய்பவர், அவர் மூலமாக நான் அற்புதங்கள் செய்யமாட்டேன், அதனால் பயனுமில்லை. ஆனால், குர்-ஆன் என்ற அற்புதத்தை அவர் மூலமாக கொடுத்து இருக்கிறேன். இந்த குர்-ஆன் அவர்களுக்கு போதாதா? என்று நச்சென்று அல்லாஹ் சொல்கிறான்.

29:50. “அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது அத்தாட்சிகள் ஏன் இறக்கப்படவில்லை?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; “அத்தாட்சிகளெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளன; ஏனெனில் நான் வெளிப்படையாக அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

29:51. அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம் உம் மீது இறக்கியிருக்கிறோம் என்பது அவர்களுக்குப் போதாதா? நிச்சயமாக அ(வ் வேதத்)தில் ரஹ்மத்தும், ஈமான் கொண்ட சமூகத்தாருக்கு (நினைவூட்டும்) நல்லுபதேசமும் இருக்கின்றன.  (முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்)

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

29:50. அன்றி ("தாங்கள் விரும்புகிறபடி) சில அத்தாட்சிகள் அவருடைய இறைவனால் அவருக்கு அளிக்கப்பட வேண்டாமா?" என்று இவ்வக்கிரமக்காரர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கின்றன. (என்னிடமில்லை.) நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன் மட்டும்தான்."

29:51. (நபியே!) இவ்வேதத்தை மெய்யாகவே நாம் உங்கள் மீது இறக்கி வைத்திருக்கிறோம் என்பதற்கு அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படும் இவ்வேதமே போதுமான அத்தாட்சியல்லவா? ஏனென்றால், இதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக (இறைவனுடைய) அருளும் இருக்கின்றது; (பல) நல்லுபதேசங்களும் இருக்கின்றன.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

29:50. இவர்கள் கேட்கின்றார்கள், “இவருடைய இறைவனிடமிருந்து இவருக்கு ஏன் சான்றுகள் இறக்கியருளப்படவில்லை” என்று! அதற்கு நீர் கூறும்: “சான்றுகள் அல்லாஹ்விடம் உள்ளன. நானோ தெள்ளத்தெளிவாக எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன்.”

29:51. அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுகின்ற வேதத்தை உம் மீது நாம் இறக்கியருளி இருப்பது அவர்களுக்குப் போதுமான சான்றாக இல்லையா? திண்ணமாக, நம்பிக்கை கொள்ளும் சமூகத்தினர்க்கு இதில் கருணையும் நல்லுரையும் இருக்கின்றன.

மேற்கண்ட வசனங்களில், இஸ்லாமை நம்பாதவர்கள் சொல்லும் குற்றச்சாட்டை அல்லாஹ் மறுக்காமல் அதனை ஏற்றுக்கொள்கின்றான். முஹம்மதுவினால் அற்புதங்கள் செய்யமுடியாதது உண்மை தான், ஏனென்றால் அவர் வெறும் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே, அற்புதங்கள் செய்பவர் அல்ல என்று அல்லாஹ் சொல்கின்றான். மேலும், இதனை அற்புதங்கள் கேட்கும் மக்களிடம் சொல்லும் படி முஹம்மதுவிற்கும் கட்டளையிடுகின்றான். மேலும் தம்மை நம்பாத மக்களிடம் சென்று, "இதோ முஹம்மது ஓதுகின்ற வசனங்கள் தான் அற்புதம்" என்றுச் சொல்கின்றான் அல்லாஹ். அற்புதங்கள் என்பது எதிராளிகள் கூட மறுக்கக்கூடாததாக இருக்கவேண்டும். மக்களின் கண்களை திறப்பது, மரித்தவர்களை எழுப்புவது, முடவர்களை நடக்கச் செய்வது, பேசமுடியாதவர்களை பேசச் செய்வது போன்ற அத்தாட்சிகள், அற்புதங்கள் செய்திருந்தால், யாருமே மறுக்கமுடியாத ஒன்றாக இருந்திருக்கும். இப்படிப்பட்ட அற்புதங்களைப் பெற்ற மக்கள் தாங்கள் மரிக்கும் வரைக்கும் இந்த அற்புதங்களை சுமந்துக்கொண்டு வாழ்ந்திருப்பார்கள், மறுப்பு சொல்ல யாராலும் முடியாமல் இருந்திருக்கும். ஆனால், அல்லாஹ் இதனைச் செய்யவில்லை.

8) முஹம்மது அற்புதங்கள் செய்பவரல்ல என்றுச் சொல்லும் இஸ்லாமிய அறிஞர் ”முஹம்மது அஸத்”

முஹம்மது அஸத் என்பவர் எழுதிய விரிவுரையில், முஹம்மது கடைசி மற்றும் பெரிய நபியாக இருக்கலாம், ஆனால், முந்தைய காலத்தில் நபிகள் செய்தது போல அற்புதகங்கள் செய்பவர் அல்ல என்றுச் சொல்கிறார்.

குர்-ஆன் 17:59க்கு இவர் எழுதிய விளக்கவுரை:

Note 71 (Quran Ref: 17:59 )

This highly elliptic sentence has a fundamental bearing on the purport of the Qur'an as a whole. In many places the Qur'an stresses the fact that the Prophet Muhammad, despite his being the last and greatest of God's apostles, was not empowered to perform miracles similar to those with which the earlier prophets are said to have reinforced their verbal messages. His only miracle was and is the Qur'an itself - a message perfect in its lucidity and ethical comprehensiveness, destined for all times and all stages of human development, addressed not merely to the feelings but also to the minds of men, open to everyone, whatever his race or social environment, and bound to remain unchanged forever. Since the earlier prophets invariably appealed to their own community and their own time alone, their teachings were, of necessity, circumscribed by the social and intellectual conditions of that particular community and time; and since the people to whom they addressed themselves had not yet reached the stage of independent thinking, those prophets stood in need of symbolic portents or miracles (see surah 6, note 94) in order to make the people concerned realize the inner truth of their mission. The message of the Qur'an, on the other hand, was revealed at a time when mankind (and, in particular, that part of it which inhabited the regions marked by the earlier, Judaeo-Christian religious development) had reached a degree of maturity which henceforth enabled it to grasp an ideology as such without the aid of those persuasive portents and miraculous demonstrations which in the past, as the above verse points out, only too often gave rise to new, grave misconceptions.(Quran Ref: 17:59 )

மேலும் குர்-ஆன் 54:1ம் வசனத்துக்கு இவர் கொடுத்த விளக்கவுரையை படிக்கவும். சந்திரனின் பிளவு பற்றி குர்-ஆன் சொல்வது, எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்ச்சியாகும், அது முஹம்மது காலத்தின் அற்புதமல்ல என்றுச் சொல்கிறார்:

1 Most of the commentators see in this verse a reference to a phenomenon said to have been witnessed by several of the Prophet's contemporaries. As described in a number of reports going back to some companions, the moon appeared one night as if split into two distinct parts. While there is no reason to doubt the subjective veracity of these reports, it is possible that what actually happened was an unusual kind of partial lunar eclipse, which produced anequally unusual optical illusion. But whatever the nature of that phenomenon, it is practically certain that the above Qur'an-verse does not refer to it but, rather, to a future event: namely, to what will happen when the Last Hour approaches. (The Qur'an frequently employs the past tense to denote the future, and particularly so in passages which speak of the coming of the Last Hour and of Resurrection Day; this use of the past tense is meant to stress the certainty of the happening to which the verb relates.) Thus, Raghib regards it as fully justifiable to interpret the phrase inshaqqa 'l-qamar ("the moon. is split asunder") as bearing on the cosmic cataclysm - the end of the world as we know it - that will occur before the coming of Resurrection Day (see art. shaqq in the Mufradat). As mentioned by Zamakhshari, this interpretation has the support of some of the earlier commentators; and it is, to my mind, particularly convincing in view of the juxtaposition, in the above Qur'an-verse, of the moon's "splitting asunder" and the approach of the Last Hour. (In this connection we must bear in mind the fact that none of the Qur'anic allusions to the "nearness" of the Last Hour and the Day of Resurrection is based on the human concept of "time".)

முடிவுரையாக, அல்லாஹ் ஒரு அற்புதமும் முஹம்மது மூலமாக செய்துக் காட்டவில்லை என்று குர்‍ஆன் அடித்துச் சொல்கிறது.இது அல்லாஹ் மீது சுமத்தப்பட்ட அவதூறு அல்லவா? 

எல்லா நபிமார்களுக்கும் கொடுக்கப்பட்ட அற்புதம், முஹம்மதுவிற்கும் கொடுக்கப்பட்டு இருந்திருக்கவேண்டுமல்லவா? ஆன்மீக தலைவராக மட்டும் இருந்த நபிகள் அற்புதங்கள் செய்யத்தேவையில்லை, ஆனால், மூஸாவைப் போன்று ஒரு அரசை நடத்தி, மக்களை வழிகாட்டுக்கின்ற (நாட்டை ஆளும் சட்டத்தை கொடுக்கும்) இடத்தில் இருக்கும் முஹம்மதுவிற்கு அற்புதங்கள் நிச்சயம் தேவையாக இருக்கிறது. 

அல்லாஹ்வின் முந்தைய வேதங்களை படிக்கும் போதும், நபிமார்களின் வாழ்க்கையை படிக்கும் போதும், அவைகள் அல்லாஹ்வின் அற்புதங்களால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதை காணமுடியும். ஆனால், குர்‍ஆனில் பார்க்கும் போது, 'முந்தைய நபிமார்களை அனுப்பிய இறைவனா இவன்?' என்ற சந்தேகம் வரும்.

எனவே, குர்‍ஆன் அல்லாஹ் மீது சுமத்திய இந்த குற்றச்சாட்டை நீக்க நாம் முயல வேண்டும்! என்று கேட்டுக்கொள்கிறேன்.

தேதி: 26 Jan 2021


அல்லாஹ் மீது இஸ்லாமின் குற்றச்சாட்டுகளும் தீர்வுகளும் - கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்  பக்கம்