ஜிஹாத் சிக்கலுக்கு விளக்கம்

ஆசிரியர்: ராபர்ட் ஸீவர்ஸ்

கடந்த ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் ’இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமா?” என்ற கேள்வியை பண்டிதர்களும், ஊடகங்களும் கேட்கும்படி செய்துள்ளன. பெரும்பாலான முஸ்லிம்கள் அமைதியை விரும்பும் மக்களாக இருக்கிறார்கள் என்ற விவரமும் நம் செவிகளில் அடிக்கடி விழுகிறது. இவைகளுக்கு இணையாக, ”இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமல்ல” என்ற சத்தமும் நம் செவிகளில் விழாமல் தப்பிக்கமுடிவதில்லை. ஒரு பக்கத்திலிருந்து “இஸ்லாம் அமைதி மார்க்கம்” என்ற சத்தம் தொணிக்கிறது, இன்னொரு பக்கத்திலிருந்து “இஸ்லாம் அமைதி மார்க்கமல்ல” என்ற சத்தமும் தொணிக்கிறது. இவ்விரண்டு சத்தங்களும் உண்மையா? அப்படியானால், இது எப்படி சாத்தியம்? 

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே இருக்கும் வித்தியாசத்தை புரிந்துக்கொண்டால், இந்த கேள்வியின் பாதி பதில் புரிந்துவிடும். மீதமுள்ள பதிலை புரிந்துக்கொள்ள ஜிஹாத் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை கவனிக்கவேண்டும். இஸ்லாம் எவைகளை போதிக்கிறது? இஸ்லாமின் முக்கியமான தூண்கள் என்ன? இஸ்லாமை பின்பற்றுகிறவர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள்  எவை? இந்த கட்டளைகளுக்கு பலவிதமாக விளக்கம் அளிக்கமுடியுமா?  இவைகள் ஒரு புறமிருக்க, முஸ்லிம்கள் ஒவ்வொரு நாளும் எப்படி வாழுகிறார்கள்? எப்படி மற்றவர்களிடம் பழகுகிறார்கள்? கடைசியாக, முஸ்லிம்களின் இருதயத்துக்கு அருகில் இருக்கும் இஸ்லாமிய கட்டளை எவைகள்? என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும்.

மேலே சொன்னவைகளின் சுருக்கம் என்னவென்றால், ‘இறையியலுக்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் இடையே இருக்கும் வித்தியாசமென்ன?’ என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும் என்பதாகும். இந்த வித்தியாசத்தை சரியாக புரிந்துக்கொள்வதற்கு, கிறிஸ்தவத்திலிருந்து ஒரு கட்டளையை உதாரணமாக காண்போம்,  அதாவது மன்னிப்பு என்ற கோட்பாட்டை காண்போம். தீமை செய்தவர்களை மன்னிக்கவேண்டும் என்று பைபிள் கிறிஸ்தவர்களுக்கு கட்டளையிடுகின்றது. இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால்,  தீமை செய்தவர்களை வெறும் மன்னிப்பதல்ல, அவர்களுக்காக வேண்டுதல் செய்யவேண்டும் என்று பைபிள் போதிக்கிறது.  

மத்தேயு 5:44 - நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.

இந்த மேற்கண்ட கட்டளைக்கு பலவகையான விளக்கங்களை கொடுக்கமுடியாது, இதற்கு ஒரே விளக்கம் தான் உள்ளது அதுவும் தெளிவாக உள்ளது. இது கிறிஸ்தவத்தின் அடிப்படையாக உள்ளது, எனவே இதற்கு பலவகையான விளக்கங்களை கொடுத்து யாரும் இதன் பொருளை கெடுக்கமுடியாது. தனக்கு தீமை செய்தவனுக்கு சரியான பாடம் புகட்டுவது தான் மனிதனின் இயற்கையான குணம் ஆகும். இந்த குணத்தையும் தாண்டி, எதிரிகளை நேசிக்கவேண்டும், அவர்களுக்காக வேண்டுதல் செய்யவேண்டும் என்பது தான் கிறிஸ்தவத்தின் தெளிவான கட்டளை. ஆனால், அனேக கிறிஸ்தவர்கள் இந்த கட்டளையை நடைமுறைப்படுத்தாமல், தங்களுக்கு தீமை செய்தவர்களுக்கு எதிராக நடந்துக்கொண்டு, பழிக்குபழி வாங்குகிறார்கள். இயேசு போதித்த இந்த கட்டளைப்படி ஏன் அனேக கிறிஸ்தவர்கள் நடந்துக்கொள்வதில்லை? இந்த ஒரு கட்டளை மட்டுமல்ல, இயேசுவின் இதர கட்டளைகளையும் பல கிறிஸ்தவர்கள் பின்பற்றுவதில்லை, உதாரணத்திற்கு, மற்றவர்களை உபசரிப்பது, நாளைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது, ஊழியத்துக்கு கொடுப்பது பற்றிச் சொல்லலாம். இங்கு சொல்லவருவது இது தான், அதாவது நல்ல கோட்பாடுகளை மார்க்கம் போதிக்கும், ஆனால், அந்த மார்க்க மக்கள் அதனை நடைமுறைப்படுத்துவதில்லை. 

இஸ்லாமின் ஆதார நூல்களாகிய குர்-ஆனும் ஹதீஸ்களும் ஜிஹாத் பற்றி போதிக்கின்றன, ஜிஹாத் ஒரு முஸ்லிம் வாழ்க்கையின் அங்கமாகும் என்றுச் சொல்கின்றது. இதனை என் முந்தைய கட்டுரைகளில் (கட்டுரை 1, கட்டுரை 2) விளக்கியுள்ளேன். ஜிஹாத் என்பது முஸ்லிம்களின் உள்ளத்தில் நடக்கும் ஒரு போராட்டம் என்று முஸ்லிம் அறிஞர்கள் கூறுகிறார்கள், ஆனால், இதனை குர்-ஆனும் ஹதீஸ்களும் அங்கீகரிப்பதில்லை. உதாரணத்திற்கு, கண் தெரியாதவர்களும், ஊனமுள்ளவர்களும் ஜிஹாதிலிருந்து விடுபடுவார்கள். இந்த கட்டளை கொடுக்கப்பட்ட சூழல், முஹம்மது போர் பற்றிய விவரங்களைச் சொல்லும் போது கொடுக்கப்பட்டதாகும். ஆனால், பெரும்பான்மையான முஸ்லிம்கள் இதன் படி நடந்துக்கொள்வதில்லை (தங்கள் மீது ஜிஹாத் நியமிக்கப்பட்ட கட்டளை என்று அவர்கள் கருதி அதன் படி வாழ்வதில்லை). 

ஜிஹாத் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீது விழுந்த கட்டளையென்று அல்லாஹ் விளக்கிவிட்டபின்பும் ஏன் முஸ்லிம்கள் அதன் படி வாழ்வதில்லை? முஸ்லிம்களின் இந்த போக்கிற்கு மூன்று காரணங்களை கூறலாம்.

முதல் காரணம்:

முதலாவதாக, பெரும்பாலான முஸ்லிம்கள் நல்லவர்களும், நல்லதைச் செய்ய விரும்புகிறவர்களுமாகவும் இருக்கிறார்கள். ஜிஹாத் அவர்களுக்கு அந்நிய கோட்பாடாகவும், அவர்களின் வாழ்க்கைக்கு பொருந்தாத ஒன்றாகவும் தெரிகின்றது. எனவே, இப்படிப்பட்ட முஸ்லிம்கள் தங்கள் வாழ்க்கையில் ஜிஹாதின் தாக்கத்தை குறைக்க முயலுகிறார்கள், அல்லது அதனை புறக்கணிக்க முயலுகிறார்கள். தங்கள் சுவைக்கு ஏற்றது போல தங்கள் மார்க்கத்தை வளைக்கும் வல்லமை மக்களுக்கு இயற்கையாகவே இருந்துவருகிறது. இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலம் இதனை காலம் காலமாக செய்துக்கொண்டு இருக்கிறது. எனவே, பெரும்பான்மை முஸ்லிம்கள் தங்கள் வேதமாகிய குர்-ஆன் ஜிஹாத் பற்றி சொல்லியிருந்தும், அதனை மௌனமாக புறக்கணித்துவிட்டு, ஒரு பக்தியுள்ள நல்ல வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். 

இரண்டாம் காரணம்:

இரண்டாவதாக, இன்னும் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு தங்கள் மார்க்கம் எவைகளை போதிக்கின்றது என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள். பல மசூதிகள், முக்கியமாக என்னுடைய பகுதியில் இருக்கும் மசூதியில் கூட, ஜிஹாத் பற்றிய போதனைகளை புறக்கணித்துவிட்டு, அல்லது அதற்கு முக்கியத்தும் கொடுக்காமல் நழுவிவிடுகின்றது. ஜிஹாத் பற்றி இஸ்லாம் போதிக்கவில்லை என்பது போல, ஜிஹாதை விட்டு ஒதுங்கி பல மசூதிகள் நடத்தப்படுகின்றன. இந்த மசூதிகளில் இஸ்லாமின் இதர போதனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஒரு மார்க்கத்தின் அடிப்படை கோட்பாடுகளிலிருந்து வேறுபட்டு சில இயக்கங்கள் காணப்படுகின்றன. அவைகள் தங்களுக்கு பிடித்த மார்க்க கோட்பாடுகளுக்கு அதிக முக்கியத்தும் கொடுக்கின்றன, தங்களுக்கு பொருந்தாத ஜிஹாத் போன்ற கோட்பாட்டை மறந்துவிட்டு வாழுகின்றன, இப்படிப்பட்ட மசூதிகள் ”அமைதி மார்க்க இயக்கங்களாக” காணப்படுகின்றன. 

ஜிஹாதில் பங்கு கொள்வது பற்றி குர்-ஆனும் ஹதீஸ்களும் கொடுக்கும் முக்கியத்துவத்தை அறியாமல் அனேக முஸ்லிம்கள் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். இஸ்லாமிய இந்த அடிப்படை நூல்களின் படி காஃபிர்களாகிய முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜிஹாத் புரிவது என்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும் என்பதை இவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட முஸ்லிம்களின் படி, தங்களுக்கு போதிக்கப்பட்ட அரைகுறை இஸ்லாமை முழுமனதோடு பின்பற்றிக்கொண்டு அமைதியானவர்களாக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். (ஒரு முஸ்லிமுக்கு ஜிஹாத் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? முஹம்மது அதைப் பற்றி என்ன சொல்கிறார்? என்று தெரியாமல் இருந்தால், அவர்களுக்கு இஸ்லாம் பற்றி அரைகுறை விவரங்கள் மட்டுமே தெரியும் என்றுச் சொல்லலாம் அல்லவா?)

மூன்றாம் காரணம்:

மூன்றாவதாக, பல முஸ்லிம்கள் ஜிஹாத் என்ற குர்-ஆனின் கட்டளையை முழுமனதோடு நம்புகிறார்கள். முஹம்மதுவின் போதனையின்படி ‘ஜிஹாத் என்பது உள்ளான போராட்டம் மட்டுமல்ல, அது வெளியே செய்யும் யுத்தமும் ஆகும்’. அதாவது ஜிஹாத் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்யக்கூடிய யுத்தமாகவும் இருக்கிறது என்பது தான் முஹம்மதுவின் போதனை[i].  ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மற்ற மக்கட்தொகையின் எண்ணிக்கையைவிட குறைவாக இருக்கும் போது, அவர்கள் அமைதியாக இருக்கவேண்டும். ஆனால், முஸ்லிம்கள் பெரும்பாலானவர்களாக மாறும்போது, இஸ்லாமுக்காக ஜிஹாத் புரிவது முஸ்லிம்களின் கடமையாகும். முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்களுக்கு ஜிஹாத் பற்றிய முழு அறிவு உண்டு, ஆனால், மேற்கத்திய நாடுகளில் அவர்கள் நேரடியாக ஜிஹாதில் இறங்கவேண்டிய காலம் இன்னும் கனியாதபடியினால் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். ஊடகங்களில் நாம் ’இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள்’ என்று படிக்கும் போது, இந்த முஸ்லிம்கள் மூன்றாம் நிலையில் இருக்கும் முஸ்லிம்களாவார்கள். அதாவது, தாங்கள் இஸ்லாமுக்காக நேரடியாக களத்தில் (ஜிஹாதில்) இறங்கவேண்டிய கட்டம் வந்துவிட்டது என்று கருதுபவர்கள் ஆவார்கள்.  

தங்களுக்காக ஒரு காலம் வரும் அப்போது ஜிஹாதில் இறங்கலாம் என்று கருதும் முஸ்லிம்களின் சதவிகிதம் எவ்வளவு என்று நம்மால் சரியாக கணிக்கமுடியாது. இப்படிப்பட்ட கணக்கெடுப்பை யாரும் எடுக்கவும் வில்லை. (இந்த வாய்ப்பு தங்கள் நாடுகளில் கிடைக்காவிட்டாலும், சிரியா போன்ற நாடுகளில் ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத குழுக்களோடு சேர்ந்தது இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அனேக முஸ்லிம்கள் தங்கள் நாடுகளிலிருந்து பயணம் செய்து, ஜிஹாதில் பங்கு பெருவதை நாம் செய்திகளில் கண்கூடாக படிக்கிறோம்).

முடிவுரை:

ஒரு வரியில் சொல்வதென்றால், இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமல்ல, ஆனால், அனேக முஸ்லிம்கள் அமைதியாக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். இஸ்லாமை தவறாக புரிந்துக்கொண்டவர்கள் என்று பட்டம் சூட்டப்பட்டவர்கள் “தீவிரவாத முஸ்லிம்கள்” அல்ல. இஸ்லாமை தவறாக புரிந்துக்கொண்டவர்கள் அமைதியாக வாழும் முஸ்லிம்கள் ஆவார்கள்.  அவர்கள் இஸ்லாமின் உண்மை போதனைகளை புரிந்துக்கொள்ளாமல் தங்களுக்கு ஏற்றபடி, இஸ்லாமை வளைத்துவிட்டு (அமைதியாக) வாழ்ந்துக்கொண்டிருப்பவர்கள் தான். மேலும், முன்றாவதாக இருக்கும் முஸ்லிம்கள், தங்களுக்கு ஒரு நல்ல காலம் வரும் அப்போது ஜிஹாதில் ஈடுபடலாம் என்று எண்ணி வாழும் முஸ்லிம்கள் தான் இஸ்லாமை தவறாக புரிந்துக்கொண்டு இருப்பவர்கள் ஆவார்கள்.

அடிக்குறிப்புக்கள்:

[i] Shoebat, Walid. God’s War on Terror. Top Executive Media, 2008, p 118-121.

ஆங்கில மூலம்: unravelingislam.com/blog/