2013 ரமளான் நாள் 4

பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்

முந்தைய மூன்று தொடர் கட்டுரைகளை கீழேயுள்ள தொடுப்புகளை சொடுக்கி படியுங்கள்:

முஹம்மதுவும், முஸ்லிம்களும் மக்கா வியாபாரிகளை வழியில் மடக்கி கொள்ளையிட்டது நியாயமா? என்று கேட்டதற்கு, என் தம்பி கீழ்கண்ட பதிலை கொடுத்தான்:

  • முதன் முதலில் மக்காவினர் தான் முஹம்மதுவை தாக்கினார்கள். எனவே, அவர்களுக்கு முஹம்மது பதிலடி கொடுத்தார்.
  • முஸ்லிம்கள் மக்காவில் விட்டுவந்த செல்வங்களை மக்காவினர் எடுத்துக்கொண்டனர். அச்செல்வங்ளை மீட்டுக்கொள்ள அல்லாஹ் முஸ்லிம்களுக்கு போர் புரிய அனுமதி அளித்தான்.

மேற்கண்ட இரண்டு விவரங்களில் முதலாவது விவரத்திற்கு, மூன்றாம் பாகத்தில் பதில் அளித்துள்ளேன்.  இந்த கட்டுரையில் நாம்  இரண்டாவது விவரத்திற்கு பதிலைக் காண்போம்.


அன்புள்ள தம்பிக்கு,

நான் என் முந்தைய கடிதத்தில் சொன்னது போல, இந்த கடிதத்தில், செல்வங்களை மீட்டுக்கொள்ள முஸ்லிம்கள் போர் புரிந்தார்கள் என்று நீ சொன்ன விவரத்திற்கு என் பதிலை இப்பொது தருகிறேன். நிதானமாக படித்துப் பார்த்து சிந்தி.

பதிலுக்கு பதில்:

குறைஷிகளே! நீங்கள் ஒரு முறை கொள்ளையடித்தீர்கள், முஸ்லிம்களாகிய நாங்கள் அனேக முறை கொள்ளையடிக்கிறோம்

1) வழிப்பறி கொள்ளையில் ஈடுபட அல்லாஹ் அனுமதியளித்தார்:

மதினாவிற்கு முஹம்மது சென்றபிறகு, அனேக வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டார். அதாவது, குறைஷி வியாபாரிகள் தங்கள் வியாபார பொருட்களோடு நாடு திரும்பிக்கொண்டு இருக்கும் போது, முஸ்லிம்கள் வழியில் பதுங்கியிருந்து, அவர்கள் மீது திடீர் தாக்குதல் செய்து, சண்டையிட்டு, கொலை செய்து, பொருட்களை அபகரித்தார்கள். இப்படி முஸ்லிம்கள் கொள்ளையடிப்பது நியாயமா? என்று கேள்வி கேட்டால், "இதற்கு அல்லாஹ் எங்களுக்கு அனுமதி அளித்தான், முஸ்லிம்களை வீடுகளிலிருந்து துரத்தி, அவர்களின் பொருட்களை அபகரித்த மக்காவினரிடமிருந்து தங்கள் பொருட்களை மீட்டுக்கொள்ள அல்லாஹ் அனுமதி அளித்தான். இது நியாயமானது தான்" என்று முஸ்லிம்கள் பதில் அளிப்பார்கள்.

முதல் முறை இவைகளை கேள்விப்படுபவர்கள், "ஆம் முஸ்லிம்கள் சொல்வது சரியானது தான் என்று நினைப்பார்கள்". ஆனால், இவைகளை ஆழமாக ஆராய்ந்தால், இஸ்லாம் இறைவனால் உண்டான மார்க்கம் அல்ல என்பதை புரிந்துக்கொள்ளலாம். 

2) உழைத்து வாழவேண்டும், பிறரை அழித்து வாழக்கூடாது – முஸ்லிம்களின் வறுமையை அல்லாஹ் எப்படி நீக்கினார்?

இஸ்லாமுடைய ஆரம்ப காலத்தைப் பார்த்தால் மிகவும் அருமையாக இருக்கும்.  முஹம்மது தனக்கு இறைச்செய்து வந்தது என்றுச் சொல்லுதல், அதனை அவர் தன் மக்களிடம் பகிர்ந்துக்கொள்ளுதல், சிலர் அவரை எதிர்ப்பதும், சிலர் அவரை ஆதரிப்பதுமாக நிகழ்ச்சிகள் தொடர்ந்துக்கொண்டு இருந்தது. முஹம்மது குறைஷிகளின் தெய்வங்கள் பற்றி அதிகமாக விமர்சிக்க ஆரம்பித்தார்,  இவரின் வாயை மூடுவதற்கு குறைஷிகள் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தது.  எனவே, இவரின் உயிரையே எடுக்க அவர்கள் எண்ணினர், இதர முஸ்லிம்களுக்கு அனேக தொல்லைகளை கொடுத்தனர். இதனால் முஸ்லிம்களும், முஹம்மதுவும் தங்கள் வீடுகளை விட்டும், செல்வங்களை விட்டும், உயிர் தப்ப மதினாவிற்கு சென்றுவிட்டனர்.  இதுவரை நடந்தது எல்லாம், புதிய மார்க்கத்தை பரப்பும் ஒவ்வொருவரும் சந்திக்கும் எதிர்ப்புகளாகும். இஸ்லாமும் இப்படிப்பட்ட எதிர்ப்பிற்கு உள்ளானது ஒன்றும் புதிய விஷயமல்ல.

ஆனால், இதன் பிறகு நடந்த நிகழ்ச்சிகள் தான் இஸ்லாமின் உண்மை முகத்தை நமக்கு காட்டுகிறது.

அ) மதினாவிற்கு முஸ்லிம்கள் வெறுங்கையோடு வந்து சேர்ந்தார்கள்.  இவர்களின் வறுமையை எப்படி நீக்குவது?  பொதுவாக தங்கள் வறுமையை போக்கிக்கொள்ள மக்கள் கடினமாக உழைப்பார்கள். 

ஆ) ஒரு மனிதன் பக்தியுள்ளனோ அல்லது பக்தியில்லாதவனோ, எவனாக இருந்தாலும் சரி, "உழைப்பு உயர்வு தரும்" என்ற சொல்லுக்கு இணங்க, அவன் கடினமாக உழைத்தால் அவனுடைய வறுமை நீங்கி அவன் உயருவான்.

இ) ஆனால், முஸ்லிம்களின் கதையை கண்டால்,  உழைப்பு மீது  அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்பது போல் உள்ளது.  தம்பி, இந்த கேள்விகளுக்கு பதில் தர உன்னால் முடியுமா? 

மதினாவில் முஹம்மதுவும், அவரோடு இடம்பெயர்ந்த முஸ்லிம்களும் என்ன தொழில் செய்தார்கள்?  உழவுத் தொழில் செய்தார்களா? ஆடுகளையும், ஒட்டகங்களையும் மேய்த்து தங்கள் குடும்பத்துக்கு தேவையான உணவை சம்பாதித்தார்களா?  வேறு நாட்டுக்குச் சென்று வியாபாரம் செய்து, அதன் மூலம கிடைத்த செல்வங்களினால் தங்கள் வறுமையை போக்கிக்கொண்டார்களா?

ஈ) அல்லாஹ் உண்மையான இறைவனாக இருந்திருந்தால், தன்னை நம்பி வெறுங்கையோடு மதினா வந்த முஸ்லிம்களை உழைக்கச் சொல்லி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அவன் ஆசீர்வதித்து இருந்திருப்பான்.

உ) குறைஷிகள்  உங்களை துரத்தி, உங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டார்கள், ஆகையால், அவர்களின் வியாபாரிகளை வழிகளில் திடீரென்று தாக்கி, அவர்களின் உடைமைகளை நீங்கள் கொள்ளையடித்துக் கொள்ளுங்கள் என்று இறைவன் கூறுவானா? இப்படி கூறுபவன் இறைவனா?

ஊ) அவன் உன்னை கொள்ளையிட்டான், ஆகையால் நீயும் அவனை கொள்ளையிடு – இதுவா இஸ்லாமின்  கோட்பாடு.  தம்பி, அல்லாஹ்வின் இந்த செயல்  மிகவும் கேவலமாக உள்ளது. 

எ) முஸ்லிம்களின் வறுமையை போக்க, அல்லாஹ் கொடுத்த  இந்த வழிமுறை கேவலமானதாகும், இது அநியாயமாகும். நல்ல முஸ்லிம்களை திருடர்களாக அல்லாஹ் மாற்றியது அநீதியாகும்.  மக்காவில் நல்ல பெயரோடு வாழ்ந்து வந்த முஹம்மதுவை ஒரு கொள்ளைக்கூட்டத்துக்கு தலைவனாக  அல்லாஹ் மாற்றியது அநீதியாகும். 

3) செல்வங்களை மீட்டுக்கொள்ள போர் புரியுங்கள் என்று குர்-ஆன் (2:217) சொல்லவில்லையே!

தம்பி, நீயும் முஸ்லிம்களைப் போலவே இஸ்லாமுடைய தர்மசங்கடமான செயல்களிலிருந்து அதனை காப்பாற்ற   சாக்குபோக்குகளை சொல்லிக்கொண்டு இருக்கிறாய். 

அந்த காலத்தில் "புனித மாதங்கள்" என்று சில மாதங்களை (நான்கு) கருதினார்கள். இந்த மாதங்களில்  போர் புரிவதோ, இதர வன்முறைகளில் ஈடுபடுவதோ கிடையாது.  ஆனால், இதனையும் மீறி முஸ்லிம்கள் குறைஷிகளை இம்மாதங்களில் கொள்ளையடித்தார்கள்.   குறைஷிகள் இதனை  மற்றவர்களிடம் பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.  முஸ்லிம்களுக்கும், முஹம்மதுவிற்கும் மிகவும் அவமானமாகிவிட்டது. இதனால், முஹம்மது ஒரு வசனத்தை இறக்கி முஸ்லிம்களின் செயல்கள் நியாயமானவைகள் தான், என்று அல்லாஹ் சொல்வது போல வசனத்தை இறக்கிவிட்டார்.  இதனை குர்-ஆன் 2:217ம் வசனத்தில் காணலாம்.

2:217 புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். 'அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (மஸ்ஜிதுல் ஹராமுக்கு) உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ் விடம் இதை விடப் பெரியது. கொலையை விட கலகம் மிகப் பெரியது' எனக் கூறுவீராக! அவர்களுக்கு இயலுமானால் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களை மாற்றும் வரை உங்களுடன் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும்   அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (2:217) பீஜே தமிழாக்கம்

2:217. (நபியே!) புனிதமான (விலக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: "அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்; ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது; அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்; உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்; இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்." (முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்) 

இங்கு கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால்,   குறைஷிகளிடமிருந்து தங்களின் செல்வத்தை திரும்பபெற போர் செய்வதாக முஸ்லிம்கள் சொல்வது எல்லாம் பொய்யாகும். இந்த வசனம் அதைப் பற்றிச் சொல்லவில்லை.  ஒட்டு மொத்த குறைஷிகளின் செயல்களுக்கு பதிலடியாக இந்த வழிப்பறி கொள்ளைகள் நடக்கின்றன என்று மேற்காணும் குர்-ஆன் வசனம் கூறுகிறது. 

புனித மாதங்களில் போர் செய்வது பெருங்குற்றமாகும் என்று  அல்லாஹ் ஒப்புக்கொள்கிறார். ஆனால், குறைஷிகளின் செயல்கள் அவைகளை விட பெருங்குற்றம் என்று அல்லாஹ் சொல்கிறார். 

அதாவது, முஸ்லிம்கள் பெருங்குற்றங்களைச் செய்ய அனுமதி அளித்துள்ளார், அவர்களுக்கு வக்காளத்து வாங்குகிறார். 

ஆக, வெறும் செல்வங்களை திரும்ப பெறத் தான் வழிப்பறி கொள்ளைகளில் முஸ்லிம்கள் ஈடுபட்டார்கள் என்றுச் சொல்வது தவறாகும். இதனை நாம் மேற்கண்ட வசனத்தின் மூலம் அறியலாம்.

தம்பி, நீ சொல்வது போல ஒரு பேச்சுக்காக நாம் ஏற்றுக்கொண்டாலும், அதிலும் அனேக சிக்கல்கள் உள்ளன:

அ) விட்டு வந்த செல்வங்களை திரும்பப் பெற வேண்டுமென்றால், ஏன் நேரடியாக மக்காவிற்குச் சென்று, போர் புரிந்து செல்வங்களை மட்டும் கொண்டு வந்து இருக்கக்கூடாது?

ஆ) ஏன் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு, தீடீர் தாக்குதல் நடத்தவேண்டும்?

இ) விட்டுவந்த செல்வங்களை திரும்ப பெறுவதற்கு பதிலாக, வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு, ஏன் மனிதர்களை கொல்லவேண்டும்?

ஈ) செல்வங்களுக்காக மனிதர்களை கொலை செய்வது இஸ்லாமில் நியாயமானதா?

உ) வெறும் பணத்திற்காக மனிதர்களை கொலை செய்ய அனுமதிக்கும் இறைவன் ஒரு இறைவனா?

ஊ) பணத்திற்காக உயிரை எடுக்கும் மார்க்கத்தில் எப்படி மேன்மையான நல்ல குணங்கள் உள்ள மனிதர்களைக் காணமுடியும்?

எ) மதினாவில் முஹம்மது மற்றும் அவரது குழுவின் வறுமையை போக்க, அல்லாஹ்விற்கு இப்படி கொள்ளையடிப்பதைத் தவிர வேறு வழியே தெரியவில்லையா?

ஏ) பல இலட்ச மக்களின் பசியை போக்க வானத்திலிருந்து தினமும் உணவை கொண்டு வந்தவன், சில நூறு மக்களின் உணவுப் பிரச்சனையை தீர்க்க, வழிப்பறி கொள்ளையை தெரிவு செய்வது கேவலமாக இல்லையா? 

முடிவுரை: தம்பி, மேற்கண்ட விவரங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால்,  முஹம்மதுவிற்கு ஆட்களின் பலம் அதிகமானதும்,  அவர் வலியச் சென்று சண்டையிட்டார், கொள்ளையிட்டார்.  இப்படிப்பட்ட   கோட்பாடுகள் உடைய மார்க்கத்தில் நீதி எங்கேயிருந்து வரும்? மன்னிப்பு எங்கேயிருந்து வரும்?  இதனை பின்பற்றும் மக்கள் எப்படி சமுதாயத்திற்கு நன்மை செய்யும் மக்களாக இருக்கமுடியும்?

• நீ என்னை அடித்தாய், இதோ நான் உன்னை கொலை செய்கிறேன்.

• எனக்கு ஒரு தீமையை புரிந்தாய், இதோ நான் உனக்கு அனேக தீமைகளை செய்கிறேன்.

• நீ என்னையும், என் மார்க்கத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை, ஆகையால் உன்னை அழித்துவிடுகிறேன்.

இப்படியெல்லாம் கோட்பாடுகளை கொண்டுள்ள இஸ்லாம் எப்படி ஒரு அமைதி மார்க்கமாக மாறும்.  

தம்பி, சிறிது சிந்தித்துப் பார்.  குறைஷிகளின் இடத்தில் முஸ்லிம்கள் இருப்பதாக கற்பனை செய்துக்கொள். உங்கள் இடத்தில் குறைஷிகள் இருப்பதாக கற்பனை செய்துக்கொள். அவர்களிலிருந்து ஒரு நபி தோன்றி உங்கள் அல்லாஹ்வை விமர்சிக்கிறார் என்று வைத்துக்கொள்.  அப்போது முஸ்லிம்கள் எப்படி செயல்படுவார்கள்? அமைதியாக இருப்பார்களா? குறைஷிகள் எப்படி நடந்துக்கொண்டார்களோ, அதைவிட 100 மடங்கு அதிகமாக நீங்கள் நடந்துக்கொள்வீர்கள்.   இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 

தம்பி, நான் மேலே சொன்ன விவரங்களை சிறிது நேரம் ஒதுக்கி சிந்தித்துப்பார். சத்தியத்தை அறிந்துக்கொள், அது உன்னை விடுதலையாக்கும்.

தம்பி ஒரு முக்கியமான விஷயத்தை உனக்கு கடைசியாக சொல்ல விரும்புகிறேன்.

முஹம்மது உயிருக்கு பயந்து மதினாவிற்கு  தப்பித்துச் சென்றுவிட்டபிறகு, அலி மூன்று நாட்கள் மக்காவில் தங்கியிருந்து. முஹம்மதுவிற்கு வரவேண்டிய பணத்தையெல்லாம் சேகரித்துக்கொண்டாராம்:

Ali stayed in Mecca for three days and nights until he had restored the deposits which the apostle held.  (Ibn Ishaq/Hisham 335, page 227 – The Life of Muhammad, A translation of Ibn Ishaq's Sirat RAhul Allah by A. Guillaume)

இப்படிக்கு,

உன் அண்ணன்

உமர்

மூலம்

உமரின் ரமளான் மாத கட்டுரைகள்